மருமகளின் படத்தைப் பார்த்து மகனை குறைகூறினாரா சிவக்குமார்?...

நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல...

நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல்முறையாக பாலா இயக்கிய படம் ஒன்றை ஜோதிகா படம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நாச்சியார் படத்தை இயக்கிய பாலாவுக்கு நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார் ஜோதிகாவின் மாமனராகிய பிரபல நடிகர் சிவக்குமார்.

அவர் கூறுகையில், முகம் சுழிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கிவைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை மையமாக வைத்து எடுத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக்கூடாது. அந்தளவிற்கு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியே வைத்துவிட்டார். அரசியாக நடித்த இளம்தேவதையின் நடிப்பு அற்புதம்.

நாச்சியார் என்ற ஜோதிகா சூப்பர் பொலிசாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். இவ்வாறு சிவக்குமார் கூறியதை ரசிகர்கள் சிங்கம் படத்தில் பொலிசாக நடித்த மகனைத்தான் கூறியுள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About