நாம் இறக்கும் வரையில் இந்த இரு உறுப்புகளும் வளர்ந்து கொண்டே இருக்குமாம்! ஏன் தெரியுமா..?

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ...

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அப்படி இல்லை.

நமது உடலில் உள்ள குறிப்பிட்ட இரண்டு பாகங்கள் மட்டும் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்க கூடியவை ஆகும்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நமது உயரம், உடல் அளவு, கைகள், கால்கள் என அனைத்துமே ஒரு காலகட்டத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை தான்.

சொல்லப்போனால் நம்மால் நமது 25 வயதிற்கு மேல் அல்லது 20 வயதிற்கு மேல் கூட நமது உயரத்தை அதிகரிக்க முடியாது.

அதே போல நாம் வளர வளர நமது காலணியின் அளவும் மாறிக் கொண்டே போகும். ஒரு சமயத்தில் நமது காலணியின் அளவு நிலையான ஒன்றாக மாறிவிடும் என்பதை நாம் அறிவோம்.

நமது உடலில் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இரண்டு உறுப்புகள் என்னவென்றால், ஒன்று காது மற்றொன்று மூக்கு ஆகும்.

எந்த உறுப்புகள் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொண்டாலும் கூட இந்த உறுப்புகளுக்கு கடைசி வரையில் ஓய்வே இல்லை என்றே கூறலாம்.

நமது உடலில் உள்ள இந்த இரண்டு உறுப்புகளின் செல்கள் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் மற்ற உறுப்புகளின் செல்கள் தங்களது செல்களின் பெருக்கத்தை ஒரு சமயத்தில் நிறுத்திவிடுகின்றன.

இதற்கு என்ன காரணம் என்றால், மூக்கு மற்றும் காதுகளில் உள்ளது மெல்லிய செல்கள்.. இதனால் தான் இவை தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About